பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fo பாற்கடல் தான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில் தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்தி லிருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடி கிறது! நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள். X எனக்குத் தோன்றுகிறது. நானும் யுேமிலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் யுேமாய் இழைந்து மறுபடியும் குடும்பத்துள்ளேயே மறைத்துவிட்ட நானும் யிேன் ஒரு தோற்றமான சாகரிதான் கீபாவளியோ? குடும் பமே கானும் நீயாய்க் கண்ட பின், இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு இப்படித்தான் தோன்றிற்று. தீபாவளிக்கு முதல் ராத்ரி, கூடத்து ஊஞ்சலில் புது வேஷ்டிகளும் புடவைகளும் சட்டைகளும் ரவிக்கைகளும் போராய்க் குவிக் திருப்பதைப் பார்த்ததும் ஏன் இத்தனை துணிகளையும் கானே உடுத்திக் கொண்டுவிட்டால் என்ன பொம்ம னாட்டி துணிகளை நானும் புருஷாள் துணிகளையும், உங்களுக்காக கானே! நீங்கள்தான் இல்லையே. எல்லாமே இந்த விசுவரூப கானும் யுேக்குந்தானே? அம்மா ஒரு மரச்சிப்பில் கரும்பச்சையாய் ஒரு உருண் டையை ஏந்திக்கொண்டு என்னிடம் வந்தார். 'குட்டீ, சாப்பிட்டுட்டையா?” "ஆச்சு அம்மா." 'தின்னவேண்டிய தெல்லாம் தின்னாச்சா?' "ஆச்சு-’ (அந்தக் கோதுமை அல்வாவில் ஒரு துண்டு வாங்கிட்டால் தேவலை, கான்தான் துண்டு போட்டேன். ஆனால் கேக்கறதுக்கு வெக்கமாயிருக்கே!) "அப்படியானால் உக்காந்துக்கோ, மருதாணியிட றேன்.'