பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அபிராமி அதைக் காணவோ, கேட்கவோ, கான் இருந்தும் இரேன். இந்த ஏமாற்றமே ஒரு துக்கம் இல்லையா? மீனாட்சி கல்யாணத்தின் போது, அகத்தியனை பொதிகை மலைக்கு விரட்டினாற் போல். 'கல்யாணம் இங்கு கடப்பதை, கடக்கிறது கடக்கிற படியே அங்கு பார்ப்பாய்." டி.வி. அப்பவே வந்தாச்சு. ஆனால் அது அசல் ஆகுமோ? பிம்பம். இன்று படுக்கப் போகுமுன், வழக்கப்படி, வானத்தை உறுதிப் படுத்திக் கொள்ள ஏன் மறந்தேன்? . வேலையிலிருந்து வந்த அலுப்பு, ஆடையைக் கூடப் பூராக்களையாமல், ரா உணவுக்கும் அலுப்பாகி பொத் தென்று விழுந்தவன் தான். இது இன்று மாத்திரம் இல்லை. அடிக்கடி வர வர வானம் பார்க்கும் கோம்காட்டிலும் பாராத நேரங்களே... லகதியங்களின் கதியே இப்படித்தான். என் அனாவசிய நேரங்களில் சிந்திக்கையில், எல்லாமே வாணாளின் வீணாள். நாய் வைராக்கியம். குப்பை மேடில் இலை விழும் சத்தம் எப்போ? வைராக்கியம் மட்டும் இருந்தால் தருமபுத்திரனுக்குத் துணையாகப் போவேனே! தொண்டை அடைக்கிறது; சிரிப்பு கேட்கிறது?-ஆம். தொண்டைக்குள் அவன் தான். அசல் நேரும்போது இருக்க மாட்டாய். ஆகையால் இப்பவே, சிரிப்பைக் கேள்.' அசல் நேரும் முன்னரே அதன் பிம்பம். udn Gif (Sample)