பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 தாயம் யில்... கட்டம் அந்த அளவுக்கு முத்திப்போச்சு. ஆமாம்; ஒருநாள், சாப்பிடறதுன்னா இப்போ சாப்பிடணும். போட்டுட்டுப் போறேன். அப்புறம் எனக்கு வேலை யிருக்குன்னேன். வேலையென்ன வேலை? டி. வி. யில் சிவாஜி. அவருக்குப் புருவம் தாக்கித்து. ஒண்னும் பேசல்லே. படம் முடிஞ்சு நான் எதிர்வீட்டிலிருந்து வந்தால், அவர் இலையில் தனக்குப் பரிமாறிண்டிருக்கார், சாதம், குழம்பு, கறி எல்லாம் ஆவிபறக்க, என்னை கிமிர்ந்துகூடப் பார்க்கல்லே. * எனக்கு ஆத்திரம். அந்த கிமிஷத்தின் உஷ்ணத்தில், "ஓஹோ, அப்படியா? எத்தனை நாள் நடக்கப் போறது பார்த்துடறேன்'னேன். - - இன்னும் பார்த்துண்டேயிருக்கே. அன்னிக்கு டி.வி.யும் கன்னாயில்லே. போனதுதான் மிச்சம். ஒரு பாசமலர் என்ன, ஒரு பாகப்பிரிவினை என்ன, ஒரு பாலும்பழமும் என்ன... அந்த சிவாஜியை இனி காணப் போறோமோ? சிவாஜியே அந்த சிவாஜியை இனி கண்டுக்க முடியுமோ? நடுராத்திரியில் திடுக்கென விழிப்பு வந்து, படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். சிவாஜியைப் பத்தி கினைச்சுண்ட தெல்லாம் ஒருவேளை எனக்கே பொருந்துமோ அதனால் தான் கினைப்பே அப்படி வந்ததோ? அவனைச் சொல்லும் சாக்கில் என்னையே சொல்லிக்கிறேனோ? எட்டிப் பார்க்கிறேன். ஆபீஸ் அறையில் விளக்கு எரியறது. ஃபைலா புஸ்தகமா? சிந்தனையா? எதில் ஆழ்க் தாலும் மனுஷன் தன்னை மறந்தான்.