பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爵0 அரவான்

  • ஒப்புக்கிட்டது தப்பு' என்றான் அவன். "அப்படியானால் காம்ப இங்கே வந்ததே தப்பு." 'காம்ப, புளைக்க வந்ததே தப்பானால், நம்ப ஊரிலே மொத மொதல்லே ஒருத்தரையொருத்தர் சந்திச்சோமே, அதுவே தப்பு-"

"இப்படி ஒருத்தரை யொருத்தர் கசந்துக்கிட்டுப் பேசினால் என்ன பிரயோசனம். புளைக்க வந்திட்டோம்; புளைச்சு ஆகணும். இக்தா, மூணு ரூபா முன் பணம் வாங்கி வந்திருக்கேன். செலவுக்கு வெச்சுக்க-’’ 'இதென்ன, நீ எனக்கு சோறு போடணும்னா கான் ஆண் புள்ளையா பிறந்துட்டு இருக்கேன்- என்னான்னு கினைச்சுட்டே உன் மனசிலே என்னை?” அவள் தொண்டை கம்மியது. வேறே நான் வேறேன்னு துட்டு வாங்கறப்போ என் கெனைப்புலே படல்லே!' "ஆமா-அப்போ கம்ம ரெண்டு பேரும் கூடிப் பொறந்த கொளந்தெதான் வேறாப் போயிட்டுதுஇல்லையா?” கரையினின்று திரும்பும் அலைக்ள் போல் நினைவுகள் பின்னோக்கிச் சுருண்ட்ன. - நல்லபடியா நாலுபேர் பேசி முடிச்சுத் தாலி கட்டின கலியாணமா யிருந்தால் இத்தனை கஷ்டம் ஏன் படனும் ஒரு இமைப் பொளுது வெறியிலே ஏமாந்து போன தோசத்துக்காக, ஊரை விட்டு ஓடி வந்து இங்கே இருக்க இடமும் புளைக்க வளியுமில்லாமே அல்லாட றோம்...' வாய்வழி புறப்படாத விதவிதமான கேள்விகள் அவரவர் மனசை இடித்தன.