பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gö序。占。黄T, 315 படத்துக்கெதிரே வைத்துத் தான் கண்ணை மூடிக் கொண்டு, அந்த அடுக்கிலிருந்து ஒரு கவரை எடுத்தார். விளைவு ரேனு கொடுத்து வைத்தாள். அப்போது ரேணு ஹாஸ்டலில் இருந்து கொண்டு ஒரு சிறிய பள்ளியில் ஆசிரியையாக இருந்தாள். கொடுத்து வைத்தாள் என்பதில் சந்தேகமா? கணவன் தோற்றத்தில் குறைவா? உக்தியோகப் பதவியில் குறைவா? அவருடைய மேல் அதிகாரிக்ள் இரண்டு முறை அவரை வெளிநாடு போகக் கோரி, மறுத்து விட்டார். காரணம்? அவருடைய கேம, கிஷ்டை, அனுஷ்டானங்களுக்குத் தடை வரும் என்று தான். போன இடம் எல்லாம் ஸ்னானத்திற்கு காவிரி கிடைக்காது. ஆனால் தினம், கோவில் தரிசனம் பண்ணா மல் அவரால் இருக்க முடியாது. ஹா, ஹகு என்று சாளிக்ராமம், கல்லுப் பிள்ளையார், ஆராதனை இதெல் லாம் வைத்துக் கொள்ளவில்லை. அம்பாள் படத்துக்கு லலிதா சஹஸ்ரநாமம் சொல்வி, வெள்ளிக் கிழமைதோறும், பாயஸ் நைவேத்யம் பண்ணி, அதைக் குழந்தைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சி, அனுபவித்தவருக்குத்தான் தெரியும். இதெல்லாம், அதனதன் ஐதீக வாசனையுடன் லண்ட னிலோ, நியூயார்க்கிலோ கிடைக்குமா? No, இந்த தங்கச் சங்கிலியை, அயல்நாட்டு வாசத்தில், சேதப்படுத்திக் கொள்ளவோ, கத்திரித்துக் கொள்ளவோ அவர் விரும்பவில்லை. இல்லை என்று அடித்தே சொல்ல லாம். அவரால் முடியாது. சிலம் ரத்தத்தில் அப்படி ஊறிப் போயிருந்தது,