பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑超且 به f آن ها تن ه T} (ت எல்லாமே உனக்குச் சொந்தம்... எனறுமே இவை உன் லுடையவைதான். நம் உறவு சகஜமாக இருந்தால் கம் முடையது என்கிற முறையில் இருந்திருக்கும். ஆனால் இப்போதிலிருந்து எல்லாம் உனக்கு மட்டுமே சொந்தம். இவைமேல் எனக்கு இனி எந்த உரிமையும் இல்லே...' என்பதற்கு அடையாளமாக தன் மழித்த தலையைத் தடவிக் கொண்டார். இந்த நிமிஷத்திலிருந்து, நான் இன்னும் இங்கு கின்றுகொண்டிருப்பது உன் தயவு, உன் னிடம் கேட்காத அனுமதி...' - "அப்படின்னா? எனக்கு ஒண்னும் புரியல்லியே?' உண்மையிலேயே திகைப்பாயிருந்தது. உள்ளங்கைகளை விரித்தார். am going away...பலப்பரீகை முடிந்தது.' -வார்த்தைகளின் கனம் அந்தக் குரலின் அழுத்தத் தில், என்னுள் அமிழ்கையில், அர்த்தம் தோய்கையில், என் முழங்கால்கள் என் கீழ் இற்றன. காலடியில் பூமி வாய் திறந்தது.

No No!! No!!!' என்னுள் கற்கள் இடிந்து அவை களுடன் நான் சரிந்து அவர் முழங்கால்களைப் பற்றிக் கொண்டேன்.

எனக்கு நீங்க வேணும்! நீங்கள் வேனும்!! நீங்கள் தான் வேனும்!!!' -அடிவயிற்றிலிருந்து இந்தக் கதறல், மடையுடைந்த இந்தக் கண்ணிர்ப் பெருக்கு, அதில் என் குளிப்பு... தினம் என்னளவாய் இத்தனை நாட்களாக கல்லாய்க் கனத்து விட்ட என் இதய பாரம் இந்தக் கண்ணிர் ஸ்னானத்தில் அதன் கரையல் அம்மாடி-இதுவரை எதற்கேனும் அழுத