பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பார்க்கவி துப் போகும்படி...அவாதான் அப்புறம் அவள் கிட்டவந்து சொல்லிடறாளே கடுகோ, பருப்போ கடன் வாங்கப் போறாப்போலே கரண்டியை வீசிண்டுவந்து. அம்மா உத்தரவு இல்லாமல் அவள் ஒரு உப்புக்கல்கூடக் கடன் கொடுக்க முடியாதுன்னு அவாளுக்கே தெரியும்-அவர்கள் எதிரிலேயே அவள் எவ்வளவு அவஸ்தைப் பட்டிருக் கிறாள்! போகட்டும் போகட்டும்; அய்யா குடி அப்பன்குடி அவளுது என்ன தட்டுக் கெட்டுப் போச்சு. எல்லாத்துக்கும் போறவேளை வந்துடுத்து.) கலத்தில் சாதத்தை வைத்துக் கொண்டு அப்போதுதான் ஒரு கவளத்தை வாயில் போட்டாள். வெறும் வயிற்றில் விழுந்ததும் விக்கல் கண்டு விட்டது. அதைச் சமாளிக்கத் தீர்த்தத்தை முழுங்கிக் கொண்டிருந்தாள். அம்மா வந்துவிட்டார். கலத்தில் சோற்றை வெச்சுண்டா காசிக்குப்போன கணவன் கூட வந்துவிடுவான் என்கிற வசனம் வீணாய்ப் போகவா ஏற் படுத்தியிருக்கா? 'பேஷ் பேஷ் ஒஹோ, பசிக்கிறதோ? பொம்மனாட் டிக்கு அப்படி ஒரு பசியா? சரி இனிமேல் எனக்கு எவ்வளவு மரியாதை கிடைக்கும்னு தெரிஞ்சுண்டேன். என் கையள்ளு அரிசியை நானே தனியாக் களைஞ்சு வெச்சுக்க வேண்டியது தான். இந்தாத்து ராஜகுமாரன் அந்த ஊர் ராஜகுமாரி யைத் தேடிப் புடிச்சண்டு வந்துட்டானோன்னோ, கதையும் நாவலும் கடத்தி வீட்டுக்கு வந்ததும் ராஜகுமாரி ராணி யம்மாளாயிட்டா. அப்புறம் இந்தக் கிழம் கட்டைக்கெல் லாம் பேசறதுக்கு என்ன இருக்கு? வேணும் வேணும், எனக்கு கன்னா வேணும்; இதுக்கு மேலேயும் வேணும்!” தட்டுச் சோறும் அப்படியே விஷமாய் மாறிவிட்டது. முழுங்கி முழுங்கிப் பார்த்தும் உள்ளே செல்ல மறுத்து விட்டது. வாகலிலே கொட்டும்படியே ஆகிவிட்டது. அதற்கு வேறே தனி வசவு!