பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ger チ・女rr. 29 கூனிக் குறுகி உட்கார்ந்திருக்கும் ஒடுக்கங்கள், குடும்ப விவகாரங்களில் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது, அகியாயங்களுக்குக்கூட அம்மாவுடன் ஆட் சேபிக்காமல் இருப்பது, தன் சிந்தனையே தன்னை யடைத் துக் கொண்டிருப்பதால் பிறரோடு ஒட்ட இஷ்டமோ சக்தியோ இல்லாமல் இருப்பது, உறக்கத்திலும் விழிப் போடு இருக்கும் காட்டு விலங்குபோல் ஒரு சதா உஷார்அவரிடம் எப்போதுமே நேர்ப்பார்வையில்லை, ஒரப் பார்வைதான்-குடும்பச் செலவுக்கு அம்மா ஏன் பிள்ளையை நம்பவில்லை, நூறு ரூபாய் கோட்டு எப்படிக் காணாமல் போயிற்று (அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்காதா என்ன? உள் மனசுக்கு உள் மனசு ஒண்ணு இருக்கே, அது தெரிஞ்சிண்டிருக்கும்) எல்லாமே, கும்மிருட்டில் திடீர்னு விளக்குப் போட்டாற்போல் புரிஞ்சுது. ஞானோதயம் என்பது இப்படித்தானிருக்குமோ? அன்றிலிருந்து எதையுமே அவள் காதில் வாங்கிக் கொள்வதில்லை. காதிலே ஒரு சிறு அடைப்பு ஏற்பட்டு விட்டது. யாரோ சொல்றா, எதையோ சொல் றா, யாரையோ சொல்றா, என்ன சொன்னால் எனக்கென்ன? ஆனால் அன்றிலிருந்து அம்மாவும் முன்மாதிரி அவ்வளவு கோபிப்பதில்லை, அவள் அன்று மூர்ச்சையாய் விழுந்ததில் அவர் கொஞ்சம் மிரண்டுட்டார்னு தோண்றது. ஆமாம்; எது எப்படிப் போனால் என்ன, அதை நினைக்கக் கூட அவ்வளவு அலுப்பாயிருக்கு! அதோ அன்னிக்கு-சரியா இன்னியோடே அறுபத்தி மூணு நாளாறது-ரேஸ் மைதானத்திலிருந்து, ஜட்கா வண்டியில் அவரைக் கட்டையாய்ப் போட்டுண்டு வந்து வீட்டில் சேர்த்தார்கள். குதிரை தோத்துப் போச்சாம்.