பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4\}ff = &F • soff = í íg நீங்கள் செஞ்சத்தை நான் ஏத்துண்டுதானே ஆகனும்? மடியோ விழுப்போ ஆசாரமோ அகாசாரமோ-' அம்மா அவர் காரியத்தைப்பற்றிச் சொல்லிக்கட்டும். எல்லாமே அவரே செஞ்சுண்டாத்தான் அவருக்குப் பாந்த மாயிருக்கிறது. எங்களைப் பெற்றவர்களும் ஏதோ தங்க ளுக்குத் தெரிஞ்சதை எங்களுக்குச் சொல்லிதான் வைத் திருக்கிறார்கள். எங்களுக்குத் தெரிஞ்சதை, எங்களால் முடிஞ்சவரை ஒன்றாய்த்தான் செய்வோம். ஆனால் அவர் ஆசாரத்தைப் பற்றிப் பெருமைபட்டுக்கொள்வதில் கடு களவு நியாயம்கூட கிடையாது. ஐலம் குடிக்கும்போது ஒரு வேளையாவது பல்லில் டம்ளர் இடிக்காத நாள் கிடையாது; இதை யாராவது சொன்னால்-இதற்கென்று கொஞ்சம் தைரியமாய் மூத்த ஓரகத்திதான் கேட்கமுடியும்-ஒப்புக் கொள்ள மாட்டார். எனக்குக் காது கேட்கல்லையே!' என்றுவிடுவார். இதென்ன காதுக்குக் கேட்காவிட்டால் பல்லுக்குத் தெரியாதா என்ன? உங்கள் தங்கை எங்கேயாவது திரிந்துவிட்டு, ரேழியில் செருப்பை உதறிவிட்டு, காலைக்கூட அலம்பாமல் நேரே அடுப்பங்கரையில் வந்து என்னம்மா பண்ணியிருக்கே?" என்று வாணாயிலிருந்து ஒற்றை விரலால் வழித்துப் போட்டுக் கொண்டு போவாள். அதற்கு கேள்விமுறை கிடையாது. அதுக்கென்னசெய்வது? நான் அப்படியிருந் தால், என் தாயும் என்னிடம் அப்படித்தான் இருந்திருப் பாளோ என்னவோ? ஆனால் அம்மா ஏதோ, தன் வார்த்தை செல்றனுன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இவ் வளவு பெரிய சம்சாரத்தில் இத்தனை சிறுசுகள், பெரிசுகள் விதவிதங்களினிடை உழல்கையில். எந்த சீலத்தை உண் மையா கொண்டாடமுடியும்? -