பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔器 அர்வான் கடலைக்காய் கொல்லையிலே காவல் காத்துட்டு, கான் வந்த வளியே நீ ஏன் வரணும்? -களத்து மேட்டிலே வக்கிறதுக்கு முத்திரையைக் கொடுத்திட்டு வந்தேன். -வந்ததுதான் வந்தியே, சும்மாப் போனியா? மடிலேருந்து பிடி கடலைக்காயை எடுத்து இந்தான்னே, சிரிச்சுக்கிட்டே. நான் நினைவு மங்கிப் போய் உன் கையைப் பிடிச்சேனே! கையை உதறி என் கன்னத்திலே ஏன் ஒண்ணு விடலே? அப்படியே என் தோள் மேலே சாஞ்சுட்டே. அண்ணக்கின்னு நெலவு ஏன் அப்படி காயனும்! ஆத்தோரத்துக்கப்பால் சினிமாக் கொட்டகை லேருந்து அம்பிகாபதிப் பாட்டு காதண்டை மோதி ஆளை. என் அப்படி சொக்கடிக்கணும்!” -நான் என்னாத்தெக் கண்டேன்? பிள்ளைப்பூச்சி உடனே கடிச்சிடும்னா கண்டேன்! இந்தப் புள்ளையைப் பத்தி அப்பொ கெனச்சமா? வவுத்தெ எத்தனை நாள் மறைச்சு வைக்க முடியும்? - உடலும் மனசும் ஒண்ணாக் கொழஞ்சு நாம் ஆசையாய் பெத்த குளங்தையை உலகத்துலே எல்லாரும் பெத்து வளக்கற மாதிரி வளர்க்க முடியல்லே. களுத்துலே மஞ்சக்கவுறு ஏர்றதுக்கு முன்னாலே வவுத்துலேருந்து இறங்கற குளங்தையெ யார் மதிக்கிறாங்க திருட்டுப் புள்ளைன்னு ஊரெல்லாம் சிரிக்க மானம் போய் உகிர் போகாமெ ஊரைவிட்டு ஒடியாக்துட்டோம். வந்து இங்கே மாட்டிக்கிட்டோம்.' x -'விதி-விதி' மனத்தின் பேச்சுக்கு முடிவே கிடையாது.