பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Göf '9F TT。 部9 இரு கழுத்துகளும் ஒரு கழுத்தாய்ப் பின்னிக்கொண்டு ஈருடல் இருதலையில் ஒரு புதுப் பட்சியை உருவாக்கிக் கொண்டு இரு வான்கோழிகள் சண்டையில் உருள்கின்றன. கழுத்துகளை லேசில் விடுவித்துக் கொள்ள முடியவில்லை போலும் அந்த உருவிலேயே புரண்டு புரண்டு முள்வேலி யில் ஒரு சந்தின் வழி வெளியேறி, அப்பாடா! எப்படியோ ஒன்றினின்று ஒன்று விடுபட்டு உருவம் பிளந்து, தொப்பைப் பாட்டிகள் போல் லொங்கு லொங்கென்று ஓடுகின்றன. பின்னால் ஒரு குடிசையில் ஒரு ஸாஹிபா வளர்க் கிறாள். ஆனால் அவற்றிற்கு வேட்டைக்காடு;இங்கேதான். மல்லிச் செடியை மிதித்துக் கொண்டு, கொத்தமல்லி விதை யைக் கொத்திக் கொண்டு, கறிவெப்பிலைக் கன்றை வேரோடு சாய்த்து-ஹரிணி வாய் விட்டு அழுதே விட்டாள் -கண்ட சேற்றை மிதித்துக்கொண்டு ஏமாந்தால் சமைய லறைவரை நீளும் கால்கள். - Tommy தென்னங்கன்றடியில் அதுவே பறித்துக் கொண்ட குழியில் படுத்திருக்கிறது. வெய்யில் தாங்காது வயிறு கொல்லன் துருத்திபோல் குபுக் குபுக். என்றைக்கு ஒரு நாள் மண்டை கலங்கி வெடுக்கென்று பிடுங்கப் போகிறதோ? இப்போது அதற்குக் கோழிகளைத் துரத்தக் கூடத் தெம்பு இல்லை. எனக்குத் தெரிந்தவரை இது குரைக்கிற நாயுமல்ல, கடிக்கிற நாயுமில்லை. நாய்களில் ஊமை உண்டோ? அப்போ இதன் பிறவிப் பயன்தான் என்ன? ஒரு காரியமுமில்லாமல் கனகாரியமாக குடுகுடு வென்று ஓடுவதும்.ஒடுவதும்.ஒடுவதும்...அவ்வளவு தானா? அலமாரியிலிருந்து கைக்குத் தட்டுப்பட்ட புத்தகத்தை இழுத்துப் புரட்டுகிறேன். மத்வாசாரியரின் சங்கர திக்