பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அதைப்பற்றி இப்போ என்ன? " அவ்வளவு லேசாய் ஒதுக்கிவிடற விஷயமா? 'வங்கி வங்கியாய்க் கத்தரித்திருக்கும் நெற்றி மயிரை லேசாய் ஒதுக்கிக்கொண்டு, எங்கேயோ பார்த்துக்கொண்டு ‘வாழ்க்கை ஒரு விளையாட்டு. நாளையக் கவலை நாளை' என்றாள். இல்லை. விளையாடும் சமயத்தில் விளையாட்டு; வினையா யிருக்கும் சமயத்தில் வினை ' என்னை என்ன பண்ணச் சொல்லுகிறாய்?" என்னுடன் வந்துவிடு 'தன் மூக்கில் விரலை வைத்தாள், கேலி ஆச்சரியத் துடன். ஏது, உன் நெஞ்சுத் துணிச்சல், என்னைக்கூடத் திக்குமுக்காடச் செய்கிறது- என்றாள். " ஏன், நீ ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உன்னை வெறுமெனச் சோதித்துப் பார்த்தேன். உன் அந்தஸ்துக்கு ஒரு நாளும் நான் குறைந்தவனல்ல. நீ கினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி கான் ஒன்றும் அன்னக் காவடி இல்லை. என் அண்ணன் ஜமீன்தார். நான் வீட்டில் கோபித்துக்கொண்டு ஓடிவந்து விட்டேன். கோபம் தணிந்த தும், என் இடத்துக்கு நான் போக வேண்டியதுதானே!-- “ ஒஹோ அதற்குமேல் பேச அவளுக்கு கா எழ வில்லை. "எங்கள் மேல் இருள் இறங்க ஆரம்பித்தது.' 制 苓 泰况