பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఇf • శ్రీ ITH 303 எனக்குத் தெரியும். பிள்ளைக்கும் அப்பாவுக்கும் தான் என்னைக் காட்டிலும் ஒப்புறவு ஜாஸ்தி. ஆனால் அவருக்கு தனியாப் போடுவான்னு தோணல்லே. எனக்கு எழுதறபோதே அப்பா, அம்மா வுக்கு நமஸ்காரம்னு சேர்த்துப் போட்டுடறான். தபால் செலவும் கொஞ்சமாவா இருக்கு ரீதர் இதெல்லாம் பாக்க றவன்தான். ஆள் சுபாவத்திலேயே கெட்டி. ஹ-ம்ை... 'நீங்கள் சொல்லக்கூடாதா... இவன் இப்படிக் கரை தாண்டிப் போய்த்தான் ஆகனுமா? நமக்கு இருக்கிறது இவனுக்குப் போதாதா?’ன்னு நான் விக்கி விக்கி அழுத போது இவர், அவனுக்கு வயசாகல்லியா...நீ இப்போ சொல்றேதெல்லாம் ஏற்கெனவே அவனுக்குத் தெரியாதா? நான் தனியா எடுத்துச் சொல்ல மாட்டேன். அவனுக்குத் தோணினதை அவன் செய்யறான். அவன் விதியை அவன் நூற்றுக்கறான். அதுதான் முறை. உனக்கு கான், எனக்கு ,ே மிஞ்சறோமா பாரு...' அப்போது என்னை அணைச்சாற் போல் என் தோள் மேல் அவர் கைப்பட்ட இடத்தைத் தொட்டுப் பார்த்துக்க றேன். பிரயோசனம்...? அது அந்தநாள். எந்த நாள்? அதுதான் புரியல்லை. நானா கெனைச்சுக் கற நாளோ? அது அது அப்படி அப்படி விட்டுப் போச்சுன்னா விட்டுப் போனதுதான். அப்புறம் ஒட்றதுன்னா சதை யோடு சேர்ந்து வளர்றது கிடையாது. கோந்து, Fewicol போட்டு ஒட்டிக்கற சமாசாரம்தான். அதுதான் பயமாயி ருக்கு. “No sun in life No fun in life