கி.பி. 1543-ல் கோபர்னிகஸ் என்னும் விஞ்ஞாளி, சூரியலும் மற்ற கிரகங்களும் பூமியைச் சுற்றவில்லை என்று கூறி அரிஸ்டாடில் கொள்கையை மறுததாா.
கிரசங்களின் போக்கினைக் கொண்டு அவை சூரியனைச் சுற்றி வருகின்றன என்றும்; அதன் மூலம் கோள்களின் இயக்கத்தைக் கணக்கிட முடியும் என்றும் கூறினார்.
பூமியும் ஒரு கிரகமே! இதன் மூலம் சூரிய குடும்பக் கொள்கை உருவாயிற்று.
1687-ம் ஆண்டு "சர் ஐசக் நியூட்டன்' என்னும் பிரிட்டிஷ் விஞ்ஞானியின் புவிஈர்ப்பு விசை பற்றிய கொள்கைக்குப் பிறகே, வானியல் வல்லுனர்களால் விண்மீன்களும், கிரகங்களும் மற்ற விண் பொருட்களின் அருகாமையில் எவ்வாறு இயங்க முடிந்தது என்பதை உணர முடிந்தது.
நியூட்டனின் கொள்கைப்படி வால் மீன்கள் நீள்வட்டப் பாதை அல்லது இணைகரப் பாதை யில் செல்ல வல்லன. சூரியனுக்கும் வால் மீனுக்கும் உள்ள தூரம்; அந்த வால் மீனின் வேகம், இவற்றின் மூலமாக இதைக் கணிக்க முடியும்.
வேகம் குறைவாக இருந்தால், நீள்வட்டப் பாதையில் வால்மீன் செல்லும்; என்றேனும் ஒரு நாள் திரும்பும் எனக் கொள்ளலாம்.