பக்கம்:நான்மணிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|நான்மணிக்கடிகை||}47}

நான்மணிக்கடிகை 47

வைத்ததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம்.

101

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் ஒருவன் அறியா தவனும் - ஒருவன் குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்

கணனடங்கக் கற்றானும் இல்.

102

மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தமக்குத் தகைசால் புதல்வர் - மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்

ஒதிற் புகழ்சால் உணர்வு.

103

இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின் நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்

வீவிலா வீடாய் விடும். .

104

நான்மணிக்கடிகை முற்றிற்று.

நான்மணிக்கடிகை முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/49&oldid=1386299" இலிருந்து மீள்விக்கப்பட்டது