பக்கம்:நான்மணிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்மணிக்கடிகை

27

நான்மணிக்கடிகை 37

எள்ளற் பொருளது இகழ்தல் ஒருவனை உள்ளற் பொருளது உறுதிச்சொல் - உள்ளறிந்து சேர்தற் பொருளது அறநெறி பன்னூலுந்

தேர்தற் பொருள பொருள்.

51

யாறுள் ளடங்கும் குளமுள வீறுசால் மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின் வேத முறுவன பாட்டுள வேளாண்மை

வேள்வியோ டொப்ப வுள.

52

எருதுடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் ஒரு தொடையான் வெல்வது கோழி - உருவொடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்ப -

செறிவுடையான் சேனா பதி. (சேனை

53

யானை யுடையார் கதனுவப்பர் மன்னர் கடும்பரிமாக் காதலித் துர்வர் - கொடுங்குழை நல்லாரை நல்லவர் நானுவப்பர் அல்லாரை

அல்லார் உவப்பது கேடு.

54

கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை - மக்களின் ஒண்மைவாய்ச் சான்ற பொருளில்லை யீன்றாளோடு

எண்ணக் கடவுளு மில்.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்மணிகள்.pdf/29&oldid=1386265" இலிருந்து மீள்விக்கப்பட்டது