பக்கம்:எனது நண்பர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்  95

புரோகிதர்

எனது அறுபதாம் ஆண்டு விழாவில் அவரே புரோகிதராக இருந்து எங்கள் திருமணத்தை நடத்தி வைத்த காட்சி எங்களால் மறக்க முடியாதது.

இறுதியாக அவரது சன்மார்க்கப் பணிகளுக்கு நான் உற்ற துணைவனானேன். சுத்த சன்மார்க்க நிலையத்திற்குச் செயலாளருமானேன். பொதுப் பணிக்குக் கணக்கெழுதும் வேலை, அவர் சொந்தச் சொத்திற்கு ‘உயில்’ எழுதும் வேலை மட்டுமல்ல, அவர் சொந்தத்திற்குக் கடிதம் எழுதும் வேலையையும் சேர்த்துச் செய்கின்ற ஒரு பணியாளனாகவே மாறிவிட்டேன்.

கடைசிக் காலத்தில் அவருக்குச் சொந்தமான பத்தரை லட்ச ரூபாய்ச் சொத்துக்களைச் சுத்த சன்மார்க்க நிலையத்திற்கும், வள்ளலார் உயர்நிலைப்பள்ளிக்கும், அனாதை மாணவரில்லத்திற்கும், சான்றோரில்லத்திற்கும் உயில் எழுதச் செய்து, பொள்ளாச்சி உயர்திரு நா. மகாலிங்கம் அவர்கள் தலைவராக உள்ள ஒரு குழுவையும் ஏற்படுத்தி, அக்குழுவினிடம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக உயிர் நீத்தார்கள்.

அவரது திருவுடலை வடலூரிலேயே வள்ளலார் உயர் நிலைப்பள்ளிக்கு முன்பு அடக்கஞ் செய்தோம். அவரை அடக்கம் செய்துள்ள இடம் ஒரு திருக்கோயிலாக விளங்கி வருகிறது. அவரை இழந்த இடத்தை நிரப்பத் தமிழகத்திற் சிலராவது தோன்றியாக வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/96&oldid=986343" இலிருந்து மீள்விக்கப்பட்டது