பக்கம்:எனது நண்பர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


தன்னுடைய நண்பர் டபிள்யு. பி.ஏ. செளந்திர பாண்டியன் நாடார் பற்றி எழுதுகின்றபோது, ஒரு மாபெரும் தத்துவத்தை நாடார் அவர்கள் சொல்லியதாக எளிமையாக விளக்கி இருக்கின்றார் கி.ஆ.பெ. அவர்கள். பொய் பேசுவதனை நாடார் அவர்கள் ஒருபோதும் மன்னித்ததே கிடையாது. இதற்குக் காரணம் கேட்ட போது,

“ஒருவனுக்குக் குடியும், சூதாடுதலும், நெறி தவறுதலும், திருட்டும் சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் நேரிடுவன. பொய்’ பேசுவது ஒன்று மட்டும் ஒருவனுடைய அயோக்யத்தனத்தினாலேயே நேரிடுவது என்றும், அதனால் அதைத் தன்னால் சகிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்”

என்று குறிப்பிட்டுள்ளார் கி.ஆ.பெ. அவர்கள். தாய்ச்சொல்லிற்காக திராட்சைரசத் தொழிற்சாலை அமைப்பதையே விட்டுவிட்டவர் நாடார் அவர்கள். இந்த நிகழ்ச்சியை அறிந்த கி.ஆ.பெ. அவர்கள் தன்னுடைய புத்தகத்தில்,

“ஒரு வீரமகனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அவனது தாயின் சொல்லுக்கே உண்டு என்ற கருத்தை மனோகரன்’ நாடகத்தில் மட்டுமல்ல, பட்டிவீரன்பட்டியிலும் உண்டு என அறிய முடிந்தது” என விளக்கியுள்ளார்.

“சர்.ஏ.டி. பன்னிர்ச் செல்வம் அவர்களை உப்புக் கடல் ஒன்று விழுங்கிவிட்டதை அறிந்து உலகம் கண்ணிர் உகுத்தது. யார் யாருக்கு அனுதாபம் கூறுவது? மெல்ல நகர்ந்து செல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_நண்பர்கள்.pdf/11&oldid=986045" இலிருந்து மீள்விக்கப்பட்டது