பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

'அன்னேஅப்பன் இல்லைநபி
ஆதம்ஹவ்வா ஆன்றிழக்கட்
கென்னேஇனிப் பேதநிலை
இவ்வுலகில் என்ருெறுத்துச்
சன்னை பெறு தீங்ககற்றிச்
சார்ந்தநல்ல சோதரராத்
தன்னையறிந்துய்யுநெறி
தந்ததுவும் பேனேமோ

தாசிம்நபி நாயகமே
தந்ததுவும் பேனேமோ!

50

முன்னபியும் பின்னபியும்
மூவுலகும் ஏத்தெடுக்கும்
நன்னபியும் இஸ்லாத்தின்
நாயகரும் தாயகரும்
பன்னபியும் உள்நெகிழ்ந்து
பக்திமிகப் போற்றிசெயும்
மன்னபியும் ஆனஉங்கள்
மாண்பென்ன மாண்டேயோ

வாசநபி நாயகமே
மாண்பென்ன மாண்பேயோ!

51

பாலர்முதல் யாவரும்தும்
பாலணுகில் யார்க்குமுனம்
ஒலமுறத் துய்யசலாம்
ஓதிமுக மன்கூறிச்
சாலஉப சார வகை
தந்துவக்கும் நல்லொழுக்கச்
சீலமற வாதாண்ட
செம்மைநலம் வாழ்த்தேமோ

தெய்வநபி நாயகமே
செம்மைநலம் வாழ்த்தேமோ!

18