பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




67

போதுவிழு முன்கொன்று
போதுவல்யான் என்றெழுந்து
மோதவந்த அன்னவர்க்கும்
முத்திநிலை தேற்றியருள்
மேதகையா நல்லமைசசு
மேவஅளித் தெண்திசையும்
பேதமற மார்க்கமுறை
பேசவிட்ட துள்ளேமோ

பிரியநபி நாயகமே
பேசவிட்ட துள்ளேமோ!

68

மக்கத்தார் சொற்றபடி
வந்துமதி காலைஒக்கல்
ஒக்கத்தான் கைத்துணியில்
ஒங்கும்,அஜ்ருல் அஸ்வத்தைச்
சிக்கத்தான் வைத்துயர்த்திச்
சேருமிடம் தேர்ந்தமைத்துப்
பக்கத்தார் போற்றநின்ற
பாரமதி ஒரேமோ

பக்திந்பி நாயகமே
பாரமதி ஒரேமோ!

69

தூர்ந்தமலைப் பொந்திலுமைச்
சுற்றமொடு தள்ளிவஞ்சர்
ஆர்ந்தஉண்டி நல்காமல்
அல்லல்நல்கி வெல்லவென
நேர்ந்தமனக் கோட்டைமுற்றும்
நீறுபட மூவாண்டு
சேர்ந்திருந்து மீண்டவுங்கள்
திண்மைநல மென்னேயோ

செல்வநபி நாயகமே
திண்மைநல மென்னேயோ!

24