பர்தாவிற்குள் முடக்க அவர் பூக்கள் பெண் பால் அல்ல.
மணமே மகரந்தமாகும் மனோகர மலர்கள் அவை.
◯ ◯
எழுத்துக்களின் மேல் நீச்சலடிக்க மட்டுமே அறிந்திருந்த என்னைப் போன்றோர் முக்குளிக்கவும் மூழ்கி முத்தெடுக்கவும் பயிற்சி பெற்றது. பாவலரின் பாக்கடலில்தான்,
பாவலரின் மான்மியத்தை நான்கு சுவர்களுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு புதையல் புதையல் என்று காத்துக்கிடக்கும் பூதங்களிடமிருந்து அந்நூல் -
--திக்குகளே எல்லாம் முட்டி மோதி எதிரொலியால் வானைத்திறக்கும்: வல்லமை பெற்ற அந்நூல்
விடுபட்டுத் தமிழ்ப் பொதுவில் உலாவரும், கம்பீரமான காட்சியைக் கானும் பெருவிருப்பினால் நான்,
-பாவலர் பிறந்த திருக் கோட்டாற்றிலேயே
அவன் வாழ்ந்திருந்த காலத்திலேயே
பிறந்து அழும் பேறு பெற்ற நான்
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம். அச்சேறாமல் கிடக்கும் அவரது நூல்கள் பற்றிக் குமுறி வெடித்து விடுவதுண்டு.