பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I00

ஆண்டும் ஒருமூன்றா அல்லலுறும் நும்கிளைஞர் வேண்டும் என எண்ணி வேறாய் ஒதுக்கிவைத்துத் தீண்டு பொருள் தடுத்த தீமையரும் நல்லுணர்ச்சி பூண்டு மகிழ்சிறப்ப போதித்த துள்ளேமோ புவனநபி நாயகமே போதித்த துள்ளேமோ!

101

ஒன்றன்பின் ஒனறாக ஒரேழ்ஆட் டுப்பாலை வென்றியுடன் வாங்கியுண்டு வீட்டிலுள்ளார் யாவரையும் துன்றுபசிக்(கு) ஒரைவைத்த துட்டனுக்கு மின்னருட்சீர் நன்றியுடன் ஈந்தளித்த ஞாயநிலை வேயேமோ ஞானநபி நாயகமே ஞாயநிலை வேயேமோ!

102

நோவுற்ற வன்பிணிக்கே நொந்துழல்வோர் யாரெனினும் மேவுற்றி தொண்டியற்றி மீட்சிபெற மேலவன்பால் நாவுற்ற இன்னுரையால் நல்லதுஆக் கேட்டிரக்கும் சோவுற்ற் நும்கருணை சொல்லவல்லார் யாரேயோ சுத்தநபி நாயகமே சொல்லவல்லார் யாரேயோ!