பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58

குற்றமுறச் செய்தஉலுர
கூடாதென் றோர்ந்துஅவரை
முற்றஅழைத் தோர்தனியாய்
முன்னிருத்திச் செய்வல்யான்
தெற்றுளதேல் ஒரும்எனச்
செப்பியது செய்துணர்ச்சி
பற்றவைத்துக் காத்தவுங்கள்
பண்புடைமை யாதேயோ

பரமநபி நாயகமே
பண்புடைமை யாதேயோ!

59

மக்கநகர் வாழ்வொறுத்து
மாமதின வாசமுன்னி
மிக்கவிரைந் தேகுமந்த
வேளையிலும் பின்தொடர்ந்து
தக்கவடி வாளுருவித்
தாக்கமுனைந் தோரிருகால்
புக்கவ்னுக் குங்கடைக்கண்
பூத்துநின்ற துள்ளேமோ

புனிதநபி நாயகமே
பூத்துநின்ற துள்ளேமோ!

60

கண்டவுடன் பல்லிளித்துக்
கைவிரித்துக் கண்சிமிட்டிக்
கொண்டபரி காசமுறை
கூர்ந்தியற்றும் கோளினர்க்கும்
மண்டலத்தி லச்செயலே
மாற்றமற எப்பொழுதும்
அண்டஅறிந் துட்கசிந்த
அற்புதமும் நட்பேயோ

அண்ணல் நபி நாயகமே
அற்புதமும் நட்பேயோ!

21