பக்கம்:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தைப்பாவாய்

53


நீ-
தேடித் திரிந்து
வாங்கிய பிச்சை!

இந்தப் பிச்சைதான்
மானுட சந்தோஷத்துக்கும்
சாந்திக்கும் கிடைத்த
மாயா தான
அமுத சுரபி!
அல்லவா..?

நீ.
சுந்தரி...!
புழுக்கைப் புழுதியில்
புரண்டாலும்
போதைக் கோப்பைகளில்
மாணிக்கக் கரைசலின் மேல்-
நுரைக்கும்
வெண்குமிழ்களாகச்
சுழன்றாலும்
நீ-
சுந்தரி மட்டுமல்ல;
சுதந்திரியுங் கூட!
சர்வ சட்ட நீதி
சம்பிரதாயங்களையும்
உன்
சயனமஞ்சத்தின்

27