பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

45


ஏரோ
மீனம்பாக்கம்
18.4.41

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

தங்கள் அரிய பொங்கல் வாழ்த்தும் கடிதமும் வந்து சேர்ந்தன. ரொம்ப சந்தோஷம் என்னை ரொம்பத்தான் வேலை வாங்குகிறார்கள். கட்டுரைகள் பல எழுதித் தள்ள வேண்டியிருக்கிறது. தாகூஜியண்யந்தான். கம்பராமாயணமும் வெளிவரவேண்டியிருக்கிறது. புதுமைப் பதிப்பகத்தார் ஒரு கற்றுச் சொல்லியை என் மேல் ஏவிவிட்டார்கள். காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பேனாவைக் கொண்டு என்னைக் குத்திக் கொண்டிருக்கிறார். பாலகாண்டமும் அயோத்திய காண்டமும் இரண்டு மாசத்தில் அச்சிட்டு வெளியாக வேண்டும். காரணம் தெரிந்து கொண்டதல்லவா நான் உடனே பதில் எழுதாதற்கு.

நண்பர் கணேசன் சொன்னார்கள், என்னுடைய திருத்தங்களைத் தாங்கள் கோவையில் சேர்க்கவேண்டும் என்று. அவ்வளவுதான். பிறகு நான் சந்திக்க முடியவில்லை. சில நாளில் சந்திப்போம். வேண்டியதைச் சொல்கிறேன்.

சங்கரன்கோயிலில் மழைபெய்து இந்த வருஷம் செளகரியமாயிருக்கும் என்று நம்புகிறேன்.

வீட்டில் குழந்தைகள் அம்மாள் எல்லாரும் செளக்கியந்தான்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்