பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

ரசிகமணி டிகேசி


கல்கி
சென்னை
13.2.49

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

நான் குற்றாலத்தை விட்டு வந்து ஒரு யுகம் ஆகிறது. ஏதோ ஒரு மாசத்தில் இங்கு வந்தேன். கோயம்புத்தூர், மதுரை, தென்காசி ஸ்டேஷன் கடைசியாக ஆழப்புழை போனேன். அங்கிருந்து திரும்பச் சென்னை வந்தேன்.

இங்கே ஆனந்திக்கும் அம்பிக்கும் (சதாசிவத்தின் மருமகன்) கலியாணம் நிச்சயம் ஆயிற்று. 9.2.49 அன்று நிச்சயதாம்பூலம், அதை ஒட்டி நடராஜன், தங்கம், குற்றாலம், சாமி, பாட்டி எல்லாரும் வந்தார்கள். கவர்னர் ஜெனரலும் வந்தார்கள். ஆகவே விருந்துக்கு மேல் விருந்து. கவர்னருடைய விருந்தும் சேர்ந்துகொண்டது. நேற்றே இதை எல்லாம் விட்டு தப்பியோடப் பார்த்தேன். சதாசிவம், அதெல்லாம் முடியாது, கலியாண நாளையும் நிச்சயித்து விட்டுத்தான் போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். டிக்கட்டுகளை எல்லாம் இன்றைக்காக மாற்றிஆய்விட்டது.

இன்று இரவு புறப்படுகிறோம். நாளை போய் குற்றாலத்தை இனங்கண்டு கொள்ளுவேன்.

வீட்டில் தாங்களும் அம்மாளும் செளக்கியந்தானே. காரைக் குடியில் ராஜேஸ்வரியும் மாப்பிள்ளையும் சுகமாய் இருக்கிறார்கள். மிக்க திருப்தி. அவர்களுக்குத் துணையாக கருணாகரத் தொண்டை மான் இருக்கிறான். சரிதான். அவனுடைய சகோதரிதான் பாளையங் கோட்டையில் கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கிறாள். கற்பவை இன்னதென்றுதான் ஆசிரியர்களுக்குத் தெரியாது.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்