பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

ரசிகமணி டிகேசி


24.8.45

இன்று பயணத் திட்டம் மாறிவிட்டது. கானாடு காத்தானுக்குப் போகவில்லை. சித்தன்னவாசலுக்கும் போகவில்லை.

டாக்டர் சோதனை செய்ததில் நோய் வசத்துக்கு வந்திருக்கிறது என்று தெரிகிறது. சர்க்கரை 4% ஆக இருந்தது 2% ஆகக் குறைந்திருக்கிறது சிகிச்சையைத் தொடர்ந்து நடத்தி முடித்துவிட வேண்டும் என்று டாக்டர், அவரைவிடப் பெரிய டாக்டர் ராஜாஜி மற்ற நண்பர்கள் எல்லாரும் தீர்மானம் போட்டு நிறைவேற்றி விட்டார்கள். இங்கேயே நாலைந்து நாள் இருந்து சர்க்கரையைப் பூரணமாய்க் குறைத்துக்கொண்டு குற்றாலம் திரும்புவதாக நானும் தீர்மானம் செய்துவிட்டேன்.

மத்தியில் ஒரு தடவையாவது குற்றாலத்துக்கு முகாம் போயிருப்பீர்கள் என்று நம்புகிறேன். சாரல் அங்கே திருப்தியாய் இருக்கிறதாகத் தெரிகிறது. மாமா இருக்கிறது குற்றாலத்திலா புதுக்கோட்டையிலா.

அருமை ராஜேஸ்வரி செளக்கியமாய் இருக்கிறாள் அல்லவா. பரீட்சைக்காக உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது. அவளுடைய நுண்ணிய அறிவுக்கு பரீட்சை ஒரு விஷயமே அல்ல. கவலைப்படவே வேண்டாம்.

அவளைப் போல பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு ஏதேனும் தெரிந்திருந்ததாகத் தோன்றவில்லை. அப்படியிருந்தும் பரீட்சையை ஒப்பேற்றி விட்டேன். அப்படியானால் ராஜேஸ்வரிக்குப் பரீட்சை ஒரு விஷயம் என்று சொல்லமுடியுமா? இதெல்லாம் படாடோபம் இல்லை உள்ளதை உள்ளபடி சொல்லுகிற காரியந்தான்.

கல்வி விஷயத்தில் நான்தான் அதிகாரி என்று ராஜாஜி சொல்லுகிறார்கள். ஆரம்பக் கல்வி சம்பந்தமாக வார்தாவில்