பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

கம்பன் சுயசரிதம்

பக்கத்திலே நின்று கொண்டிருந்த பரம பாகவதர் ஒருவர் பாாக்கிறார். அவருக்கோ இவன் பேரில் ஒரே கோபம் ‘இப்படியும் இருக்குமா ஒரு பிரகிருதி? சந்நிதி முன் வந்தும் வணங்காமல் நிற்கிறானே அப்படி இவன் என்ன வணங்கா முடியனா?’ என்றெல்லாம் எண்ணுகிறார். அவருக்கு இருந்த ஆத்திரத்தில் கம்பன் விலாவிலேயே ஒரு குத்துக் குத்தி ‘என்ன ஐயா? ஆராதனைக்கு உரிய பொருள்கள் ஒன்றும் கொண்டுவரவில்லை என்றால், சந்நிதியில் மூர்த்தியைக் கைகூப்பித் தொழவுமா தெரியாது’ என்று கேட்கிறான், அப்போதுதான் விழித்துக்கொண்ட கம்பன், அப்பரம பாகவதருக்குப் பதில் சொல்கிறான். கவிச்சக்ரவர்த்தி, அல்லவா! பதில் பாட்டாகவே வருகிறது. பாட்டு இதுதான்

‘நாராயணாய நம’ என்று
    விண்ணோடு
பாராளும் பாதம் பணிந்து
    ஏத்துமாறு அறியேன்
காராளும் மேனிக்
    கருணாகர மூர்த்திக்கு
ஆராதனை என்
    அறியாமை ஒன்றுமே

என்ற பாடலை பரம பாகவதருடன் சேர்ந்து நாமும் கேட்கிறோம். கோயிலை அறிந்தாலும் கும்பிடத் தெரியாத தன் அறியாமையை எவ்வளவு எளிமையோடு சொல்கிறான். அதைவிட அவன் ஆராதனைக்குக் கொண்டு வந்த பொருள் தன் அறியாமையே என்று சொல்கிறபோது எத்தகைய விளக்கம் பெறுகிறோம். உண்மைதானே! இறைவனையும் பெரியவர்களையும் காணும்போது நாம் கொண்டுபோக வேண்டுவதும், நம்மிடம் நிறைய இருப்பதும், அவர்களிடம் கொஞ்சமும் இல்லாததுமான பொருளைத்தானே கொண்டு போய் காணிக்கையாக வைத்து ஆராதிக்க வேண்டும். நம்மிடம் நிறைய இருப்பது அறியாமை, இறைவனிடத்துக்