பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

ரசிகமணி டிகேசி


கைத்தலம் கண்ணாக்
கனவுகாண் பான்ஒருவன்
பொய்த்தலைமுன் நீட்டுதலே
போள்ம்

கள்ளவாசல் வழியாகப் பொய்த்தலையை விட்டு சோதிப்பது போலத்தான் இந்தப் பண்ணை விட்டுச் சோதிப்பதும். பாணன் என்ன வருகிறது? அவனே வரட்டும் பார்த்துவிடுகிறேன் ஒரு கை.

இப்படியிருக்கிறது நாடகம்.

விளாத்திகுளத்தில் தாங்கள் குறிப்பிட்டிருக்கிறபடி தேங்காய் தட்டித் தமிழ்ப் படிக்க ஆரம்பித்தேன். தமிழுக்கு வேறு எங்கேயாவது பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லைதானே.

சீக்கிரத்தில் காரைக்குடியில்,

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்


❖❖❖