இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
190
கம்பன் சுயசரிதம்
பாட்டும் உரையும்
பயில்கின்ற பண்பறியா
ஒட்டைச் செவிபடைத்த
ஊமையருக் குப்பகைவன்
உள்ளத்தில் எழுகின்ற
உணர்ச்சிக்கு உருவத்தை
அளிக்கின்ற ஆற்றலினை
அறியாதார்க் குப்பகைவன்
துன்பம் துடைக்கவல்ல
தூய கவிதையினை
இன்ப மொடுபாட
இயலாதார்க் குப்பகைவன்
எங்கும் நிறைந்துள்ள
எழிலார் இறையருளின்
பொங்குகின்ற பூரணத்தைப்
போற்றாதார்க் குப்பகைவன்
கண்ணுதல்போல் சடைவிரித்து
கடலலைமேல் கதிரவனும்
பண்ணிசையோ டாடுவதைப்
பார்த்தறியார்க் குப்பகைவன்
அந்திதரு சித்திரத்தின்
அழகினிலே தான்மயங்கி
வந்தித்துப் போற்றி
வாழ்த்தாதார்க் குப்பகைவன்
கலலினிலும் செம்பினிலும்
கடவுளையே காட்டுகின்ற
பல்திறத்துச் சிற்பிகளின்
பண்பறியார்க் குப்பகைவன்
கற்றதனால்ஆயபயன்
கடவுளையே தொழுதலென