பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

183

கம்பன்என் ஆசானே,
 கம்பன்என் தோழனுந்தான்,
கம்பன்என் தெய்வமையா!
 காண்கின்றோம் இவ்விதமே
என்றுபலர் பாமாலை
 இயற்றிப் புனைகின்றார்
நன்றாயி ருக்குமென்று
 நான்வேறேசொல்லனுமோ”
என்றுஒரு பெருமிதத்தோடு
 எலலோரும் திருநாட்கு
என்னோடே வருக என்று
 எக்களிப்போடே அழைத்தேன்.

இவ்வுரையைக் கேட்டொருவர்
 எழுந்தார் சினத்தோடே
தெவ்வரைப்போ லேவெகுண்டு
 தெறலோடு எனைப்பார்த்து
என்னையா சொன்னீர்?
 யாரிடத்தே பேசுகின்றீர்
கன்னித் தமிழ்மொழியில்
 காவியத்தைத் தானெழுத
கதைவேறே கம்பனுக்கு
 கையில் கிடைக்கலையோ?
பதைக்கின்றோம் எண்ணுகையில்,.
 பழிபூண நாணுகின்றோம்
சித்திரத்தில் திட்டநல்ல
 சிலப்பதிகா ரம்இருக்க
உத்தார மாய்ப்பேச
 உயர்சங்கத் தமிழிருக்க
எவனோ எழுதிவைத்தான்

 ஏட்டில் ஒரு கதையை