பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

ரசிகமணி டிகேசி


 சந்தேகம் இல்லை. முத்துசிவனும் இங்கே வருவதாக எழுதி இருக்கிறார்கள். ரஜா காலந்தானே.

கல்கி அவர்கள் வந்து 10 நாளாகிறது. நாளை சென்னைக்குத் திரும்புகிறார்கள்.

குற்றாலத்தில் நல்ல காற்று இருக்கிறது. அருவிதான் இல்லை. கிணற்றுத் தண்ணீரை வைத்துச் சமாளித்துக் கொள்ளுகிறோம்.

ராஜேஸ்வரியும் குழந்தையும் நடராஜூம் தஞ்சையில் தானே இருக்கிறார்கள். காலேஜ் திறக்க நாள் இருக்கிறதே. அம்மாளுக்கு உடம்பு செளக்யந்தானே. மற்றும் எல்லோருக்கும் என் அன்பு.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - கும்பகர்ணனது குணாதிசயங்களை அற்புதமாய் வகுத்திருக்கிறார் கம்பர். மிக உயர்ந்த பாத்திரமாகவே வரைந்திருக்கிறார். அவனை இடைச்செருகல் ஆசாமிகள் கோரமாய் காரிக்கேச்சர் செய்துவிட்டார்கள். நம்முடையவர்களுக்கும் அந்த கோரச் செயல்கள் உவந்தவையாய் இருக்கின்றன. அவர்களுக்கு இனிக் கம்பன் மேல் தனியான கோபம் ஒன்று பிறக்கப் போகிறது. அதையும் பார்த்து அனுபவிக்கலாம் நாம். கோயம்புத்துருக்குத் தாங்களாவது வரவேண்டும் என்று எண்ணியிருக்கிறார்களே. மிக்க திருப்தி.

❖❖❖