பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

கம்பன் சுயசரிதம்

வள்ளுவப் பெருந்தகையார்
      வாழும் வகையுரைப்பார்
தெள்ளுதமிழ் இன்பமங்கு
      தெரிந்திடவோ தெம்பு இல்லை
மக்களது நாகரிகம்
      மன்னரது பண்பாடு
ஒக்க உரைக்கின்ற
      உன்னதமாம் நூல்க ளெலாம்
என்னறிவை வளர்த்தாலும்
      என்னிதய தாபமது
இன்னும் தணியவிவை
      ஏங்கி நின்றேன் கவியினுக்கே
அவ்வைக் கிழவி தரும்
      அழகான பாக்களிலே
கவ்வை தனை யகற்றும்
      கவிதைச் சுகமறிந்தேன்
மூவேந்தர் புகழுரைக்கும்
      மூன்று தொள் ளாயிரத்தில்
நாவேந்தர் சொல்நயத்தை
      நன்றாய் அனுபவித்தேன்
கலிங்கத்துப் போரினிலே
      கருணாக ரன் புகழ்தான்
ஒலிக்கும் பனுவலெனும்
      உன்னதமாம் பரணிதனில்
சயங்கொண்ட கவிஞனவன்
      சாற்றும் கவிகளிலே
நயங்கண்டு நின்றேன் யான்
      நல்ல தமிழ் அறிந்தேன்
நந்திக் கலம்பகத்தின்

      நலமார்ந்த கற்பனையில்