இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
171
எண்ரிய ஜோதியோடு
எங்கும் எழில்பரப்ப
கண்ணுதலோன் நடனமிடும்
இம்மட்டோ
கடல் அலைமேல் இரவினிலே
கவிபாடும் முழுமதியம்.
மடல் அவிழ்ந்த மலர்போல
இப்படித்தான்
கல்லெனக்கு கவிசொல்லும்
கடலெனக்கு காவியமாம்.
புல்லெனக்குப் புத்தகமே
புனல் எனக்கு வாழ்வு தரும்.
இதுவரை நான் சொன்னதெலாம்
எனக்கென்றே வாய்த்ததொரு
புதிய அனுபவமென்று
என்றாலும்,
இத்தகைய அனுபவம் என்
இலக்கிய நல்வாழ்வினிலும்
சித்தித்த தென்பதனை
சிறியேன் உணர்கின்றேன்.
கவியென்றால் இன்னதென்று
காணஅறியாது
தவிக்கின்ற நாளிலெனைத்
தடுத்து ஆட்கொண்டவனும்,
உள்ளத்தில் எழுகின்ற