34
கம்பன் சுயசரிதம்
என்று தானே நான் தமிழர்களை எல்லாம் கூவியழைத்திருக்கிறேன். ஆனால் நான் கூவி அழைத்த குரல் இன்னும் எல்லோர் காதிலும் நன்றாகப்படவில்லைபோல இருக்கிறது. அது நன்றாக விழும்படி செய்வதே உன் போன்றவர்களின் சேவையாகயிருக்க வேண்டும். (இன்னும் இப்படியே என்ன என்ன எல்லாமோ சொல்லிக்கொண்டே போனார் மிக்க உணர்ச்சிப் பெருக்கோடு)
நான் - சரி ஐயா. தங்களை மிகவும் சிரமப்படுத்திவிட்டேன். ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்கிறேன். எவ்வளவோ விஷயங்களைச் சொன்னீர்களே. உங்கள் குடும்ப விவகாரங்களைக் கொஞ்சம் சொல்லலாமோ?
அந்த அருமந்த மகன்?
கம்பன் – தம்பி எதைப் பற்றிப் பேசககூடாதோ அந்தப் பேச்சை எடுத்துவிட்டாய். என் மனம் நோகச் செய்துவிட்டாய். என் சுய சரிதத்திலிருந்து என் வாழ்விலே தவிர்க்க முடியாத சோகம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது என்பதை உன்னால் ஊகிக்க முடியவில்லையா? வீரத்தையும் காதலையும் விளக்கமாக உரைத்த நான் சோகத்தைப் பற்றிப் பாடும் போதெல்லாம் என் இதயத்தையே பிழிந்து வைத்திருக்கிறேனே! ராமனைப் பிரிந்த தயரதன், மேகநாதனைப் பிரிந்த ராவணன் துயரத்தை எல்லாம் நான் உணர்ந்தவன். பாடியவன். இன்னும் ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன்.
- தேனடைந்த சோலைத்
- திருநாடு கைவிட்டு
- நான் அடைந்தேன் என்னத்
- தரியாது காவல நீ
- வானடைந்தாய் இன்னம்
- இருந்தேன் நான் வாழ்வு உகந்தே
- தேனடைந்த சோலைத்
என்று ராமன் கதறும் கதறல் யாருடைய கதறல் என்று நினைக்கிறாய் தம்பி.