பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

கம்பன் சுயசரிதம்


வந்தவர் – அப்படியா? அப்படியானால் இப்படிக் கொடு (என்று ஏட்டை வாங்கினார் . ஒரு புரட்டுப் புரட்டினார்)

தம்பீ! இது என் சுயசரிதம்தான். ஏடு என்னிடம் இருக்கட்டும். உனக்கு விளங்காததை எல்லாம் கேள். நான் சொல்கிறேன் பதில். ஒரே ஒரு நிபந்தனை. நாளையே கம்பருடன் பேட்டி . நமது நிருபர் தரும் தகவல் என்று கொட்டை எழுத்தில் நான் சொல்லியதை எல்லாம் பத்திரிகையில் பிரசுரித்துவிடாதே.

நான் – அதைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் ஐயா. கேள்விகள் கேட்கலாமோ?

வந்தவர் – சரி கேளேன்.

நான் ஆமா, முதலிலே உங்களுடைய பேர்தான் என்ன?

கம்பன் – என்ன தம்பி முதல் முதலிலேயே அடி மடியில் கை போடுகிறாய். பேரில் என்ன இருக்கிறது. என் தாய் தந்தையர் இட்ட பேர் என்னவோ? எனக்கே தெரியாது. எப்படியோ கம்பன் என்ற பேர் நிலைத்துவிட்டது. கச்சி ஏகம்பன் எங்கள் முன்னோர்களின் வழிபடு தெய்வமாக இருந்திருக்கலாமோ என்னவோ? ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பதை அறியாயா!

நான் – சரி, வகையாக மாட்டிக் கொண்டீர்களா, நீங்கள் பிறந்த ஊர் எது?

கம்பன் – உனக்குத்தான் தெரியுமே - நான் பிறந்த ஊர் தேர் அழுந்தூர் என்று வழங்கும் திருஅழுந்துர். கம்பன் பிறந்த ஊர் காவிரி தங்கும் ஊர் என்ற பாட்டெல்லாம் உனக்கு மனப்பாடம்தானே.