பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

கம்பன் சுயசரிதம்

பாரிடத்தில் பங்குனியில்
     பகருகின்ற அத்தத்தில்
காரைக்குடியினிலே
     கம்பனுக்குத் திருநாள்
சீராகச் செய்கின்ற
     செட்டிநாட் டன்பருடன்
சேர விரைந்திடுவீர்
     சென்றங்கு தானிருப்பீர்
வேறுள்ள வேலையெலாம்
     விட்டிடுவீர் இப்போது,
என்றெமக்குத் தெரியாதா?
     இத்தனை நாள் பழகியுந்தான்
என்று ஒரு நண்பர்
     எவ்வத் தொடுபேச,
வருஷந்தோ றுந்திருநாள்
     வகையாய் நடத்துகின்றார்
விருந்தருத்தி மக்களுக்கு
     வித்தார மாய்ப்புகட்ட
இந்தத் திருநாளில்
     ஏற்ற முறுமுறையில்
வந்தனையைக் கம்பனுக்கு
     வண்ணமுறச் செய்வதற்கு
என்னதிட்ட் மிட்டுள்ளான்
     எழிலார் கணேசனுந்தான்
என்றுமிக்க ஆவலுடன்
     எனைக்கேட்டார் மற்றொருவர்.
“கம்பன் திருநாளில்
     கவிதை அரங்குண்டு
கம்பன்என் தந்தையென்பர்,

     கவிஞன்என் காதலனாம்,