பக்கம்:05-03-இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கோமானாகிய கோவை இளஞ்சேரனார் நாடறிந்த நற்புலவர். நற்றமிழாயும் ஆய்வறிஞர்; நாவலர்; சொற்றமிழ் தோயும் தமிழ்ப் பாவலர். தமிழ் முழுதறிந்த தன்மையர்.

நாகையில் தமிழ்வளர்க்கும் சேரனார் மறைமலையார்க்கு நிறை சிலை தோற்றுவித்த செயல் வல்லுநர்.

நூலாருள் நூல் வல்லாராக, நுண்மாண் நுழைபுலம் வாய்ந்த இளஞ்சேரனார் நமக்கோர் இளங்கோவாக இலங்கி வருகிறார்.

செய்வன திருந்தச் செய்யும் சீர்த்தி சான்ற இச்செந்தமிழ்ப் புலவர் மரபு தெரிந்த மாட்சியும், புதுமை விழையும் புதுநெறிக் காட்சியும் சிறக்கப் பெற்றவர்.

கருத்தாழமும் தெளிவும் தோய்ந்த இச்சான்றோரது நூல்களால் தமிழ்நாடு பயன்பெறும்.



டாக்டர் ஒளவை. நடராஜன், எம்.ஏ.,பிஎச்.டி.,

தமிழ்நாட்டரசு

மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர்,

சென்னை.