பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தென்னைமரத் தீவினிலே...

ராணுவத்தினரைப் பார்த்ததும் விஜயன் உள்ளத்தில் ஒருவித பயம் இயற்கையாக எழுந்தது. ஆயினும் தான் அணிந்திருந்த புத்த பிட்சு உடையின் மீதுள்ள நம்பிக்கையினால், சட்டென்று அருகிலுள்ள ஒரு சிறிய சந்தினுள் நுழைந்தான்.

சிறிது தூரம் நடந்து பல தெருக்களைக் கடந்து சென்று வெளியே வந்தான். அங்கே பல வீடுகள் பற்றி எரிந்து கொண்டிருப்பதை இருவரும் கண்டனர்.

முன்னேயும் பின்னேயும் செல்ல முடியாத நிலையில் ஒரு மூலையில் வந்து நின்ற போது, விஜயன் மனதில் திடீரென்று, இந்தத் தெருவிற்கு ஒரு தெரு தாண்டி உள்ள ஒரு வீட்டில் தானே லிஸியா இருக்கிறாள்’ என்பது நினைவிற்கு வந்தது. அந்த வீட்டின் அடையாளம் அவன் நினைவிற்கு வந்ததும், அருணகிரியின் கையைப் பற்றிக்கொண்டு வேகமாக லிசியாவின் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினான்.

கதவு திறக்கப்பட்டு, கவுண் அணிந்திருந்த முப்பது வயதுச் சிங்களப் பெண் ஒருவள் எட்டிப் பார்த்தாள். நிற்கும் புத்த பிட்சுவை முதலில் பார்த்துவிட்டு, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று பணிவோடு கேட்டாள்.

அன்பான குரலில், “மகளே நீ, விக்கிரம சிங்காவின் மனைவி லிஸியா தானே” என்று கேட்டான்.