பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

125

திடீரென்று அவள் உள்ளத்தில் ஒரு புதிய யோசனை தோன்றியது. போலீஸ் கண்ணிலிருந்து தப்ப ஒரு புத்த பிட்சுவைப் போல வேடமணிந்து தன் மகனைத் தேடிப் புறப்பட்டான் விஜயன் பொன்னம்பலம் வீட்டிற்கு வந்ததும் அங்கிருந்த அனைவரும் எலிசபெத் ஓட்டலுக்குச் சென்றதை அறிந்து அங்கு விரைந்தான் விஜயன். அங்கு அருணகிரியை சந்தித்தான்

“அப்பா நான் உன் கூட சிறிது தூரம் வருகிறேன்,” என்று மிகவும் கெஞ்சுகிற குரலில் கேட்டு விட்டு அருணகிரி பரமகுருவின் முகத்தைப் பார்த்தான்

“சரி விஜயா...அருணகிரி ஆசைப்படுகிறான்; பத்திரமாக போய்விட்டு வாருங்கள்,” என்றார்.

கொழும்பு நகரத்துத் தெருக்கள் நியான் விளக்குகள் ஒளியில் மினுக்கிக் கொண்டிருந்தன.

அருணகிரி, விஜயன் இருவருமே ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து கூடியிருப்பதால் அந்த மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே வந்து விட்டனர்.

“சரி, திரும்பலாமா அருணகிரி?” என்று விஜயன் கேட்கும்போது, எதிரில் நெரிசலான ஒரு தெருவிலிருந்து தங்களை நோக்கி வரும் ஒரு கூட்டத்தை துரத்திக்கொண்டு; சில ராணுவத்தினர் ஓடிக் கொண்டிருந்தனர்.