பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14
உயிர்காத்த உத்தமன்

ந்த மகிழ்ச்சியான விஷயத்தை முதலில் யாரிடம் சொல்லுவது? அம்மாவிடமா? கல்யாணியிடமா? ஆனால், நிச்சயமாக வள்ளியம்மையிடம் இந்த இனிப்பான செய்தியைச் சொல்லுகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன்.

“மாமா! சாப்பிடக் கூப்பிடறாங்க!” என்று அருணகிரியின் குரலைக் கேட்டுத் திரும்பினார் பரமகுரு. அவனுடைய குரலில் பணிவோடு அன்பும் கலந்திருப்பதை அவர் ஒரு போதும் கவனிக்கத் தவறியது இல்லை.

அருணகிரியைத் தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்ட பரமகுரு, “நீ சாப்பிட்டாயா?” என்று கேட்டார்.

“இல்லை! உங்களுக்காகத்தான்” எல்லோரும் காத்திருக்கிறார்கள்!” என்றான்