பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

85

சிங்களக மொழியில் அர்ச்சனை செய்கிறார்கள்,” என்று விளக்கினார்.

இங்கே மாணிக்க கங்கை என்னும் புண்ணிய நதி ஓடுகிறது. நீராடினால் விசேஷம், இங்கு ராமகிருஷ்ணா மடமும் இருக்கிறது. விவேகானந்தர் மேலை நாடுகளில் பயணத்தை முடித்துக்கொண்டு இங்கே வந்ததன் நினைவாக அமைக்கப்பட்ட ‘விவேகானந்த சபை’ இங்கு உள்ளது என்றார்.

கோயிலைக் கடந்து மரங்கள் அடர்ந்த விசாலமான புல் தரையில் நடந்து கொண்டிருந்தபோது ராதாவும், தங்கமணியும் “பசிக்கிறது பாட்டி” என்றனர்.

அந்த இடத்தின் அழகைப் பார்த்ததும், “சரி நிழலாய் இருக்கிறது, இங்கேயே உட்கார்ந்து எல்லாரும் சாப்பிடலாம்,” என்று கூறிய கல்யாணி, பணியாளிடம் சாப்பாடு கொண்டு வரச்சொன்னாள்.

எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து கொண்டனர். அவரவர்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு வயிறு நிறைந்ததும் புதுத்தெம்போடு புறப்பட்டனர்.

கார்வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. அப்போது கனகசபை, “நாம் இப்போது ‘யாலர்' காட்டை கடந்து திரிகோணமலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

தெ-6