பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தென்னைமரத் தீவினிலே...

முகத்திலும் ஒரே சோகம் அல்லது யார் மீதோ ஆத்திரம்.

தன் வீட்டு வாசலை மிதித்தபோது விஜயன் அங்கே கண்ட காட்சி அவனை குலை நடுங்கச் செய்தது. தெருவே அவன் வீட்டு வாசலில் கூடியிருந்தது. அவனது நண்பர்கள், அழுதபடி விஜய னிடம், “அண்ணே! பாவிங்க நம்மை பழிவாங்கிட்டாங்க,” என்று கதறியபடி வள்ளியம்மையை காட்டினர். வீட்டின் நடுக்கூடத்தில் தலைமாட்டில் அகல் விளக்கெரிய வள்ளியம்மையின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவளருகே ஒரு பையும் இருந்தது.

அவனைக் கண்டதும் மாரியம்மாள் தான் முதலில் குரல் கொடுத்தால், “விஜயா, வள்ளியம்மை இப்படி நம்மை எல்லாம் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டோளே,” என்று வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.

அவனது கண்கள் நெருப்புத்துண்டு போல் அந்த மங்கலான வெளிச்சத்திலும் பிரகாசித்தன. நரம்புகள் எல்லாம் வெடித்துச் சிதறி விடும்போல் உடலுக்குள் துவம்சம் செய்தன.

பிரமை பிடித்தவன் போல் எதுவுமே பேசாமல் மனைவியையே பார்த்து கொண்டிருந்த விஜயன், இடி முழக்கம் போல் ‘வள்ளி’ என்று அலறியபடி அவள் கால்களில் தன் முகத்தைப் புதைந்து கொண்டு அழுதான்.