பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

143

அவன் குரலைக் கேட்டு, பரமகுரு, லட்சுமி அம்மாள், காந்திமதி கல்யாணி, பாபு, ராதா, தங்கமணி எல்லாரும் திரும்பிப் பார்த்தனர்.

ஆனால் அவன், யாரையும் பாராமல் குழந்தையையே பார்த்தபடி, “வள்ளி... வள்ளி...” என்று கொஞ்சிக் கொண்டிருந்தான். அப்போது அவனது கண்களில் வழிந்தோடும் கண்ணிரைக் கண்டு யாருமே கவலைப்படவில்லை. ஆம்! அது ஆனந்தக்கண்ணிர் அல்லவா?