பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 


எண்ணுறும் போது தமிழையே யெண்ணிர்;

இசைத்துழி தமிழையே பிசைப்பீர்;

பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே

பழுதறப் பண்ணியின் புறுவிர்;

உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,

உயிருளந் துடித்திடும் போதும்,

கண்ணினு மரிய தமிழையே கருதிக்

காரிய வுறுதிகொண் டெழுவிர்!

எந்தாய் வாழ்க

சுத்தானந்த பாரதி