பக்கம்:பதினாறும் பெறுக.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30

30

முத்தன் : நியாயம் நடத்தை, பழக்க வழக்கம், நல்லது கெட்டது எதிலி யும் குடும்பம்னு ஒரு அமைதி இருக்கணுமுங்க பிரபு செல்வரங்கத்தோட பெரிய குடும்பத்திலே அமைதிக்கு எடமே கிடையாது.

பரம : ரொம்ப பணக்காரனுக்கும், ரொம்ப ஏழைக்கும் வாழ்க்கையிலே அமைதி இருக்காது.

முத்தன் . அத்தோட குடும்பமும் பெரிசு, கேக்கணுமா ? மக்க மருமக்க, சின்னது, பெரிசு, படிக்கறது, படிக்காதது, எல்லாரையும் திருப்திபண்ண முடியலே. பாவம் திக்குமுக்காடுறாரு !

பரம: அதனாலே ?

முத்தன்: ஏழாவது மக சண்பகம், அவளுக்கேத்த காதலனை அவளா கவே தேடிக்கிட்டா.

பரம : (குழம்பி) ஊம் ? .. நெசம்மாவா ? ...முத்தா இதென்னடா புதிய தலைவலி வரதட்சணை ஒரு லட்சமா ?

முத்தன்: அது பழைய தலைவலியே நீங்கலே. உடனே ஒங்களைப் பார்க் கணும்னு துடியா துடிக்குதுங்க மாலதியம்மா, பொறப்படுங்க.

பரம : முத்தா! நான் இப்ப என்னடா செய்யட்டும் ? எப்படிடா வரட்டும் ?

முத்தன்: சரி இப்பவேனாம். ராத்திரிக்கு வழக்கம் போல வந்து சேருங்க.

பரம: முத்தா யாரு முன்னாடியும் அவளைப் பத்தின பேச்சையே எடுக் காதேடா ! என்னோட மூச்சே அடங்கிப் போயிடும் போல இருக்குதுடா.

முத்தன்: ! ஐயா வேணாமுங்க. அப்படி ஏதாச்சும் ஆயிடப்போவுது. தைரியமா இருங்க, தோ தலைவலி மருந்து கொண்டாறேன்.

(உள்ளே போகிறான்)

காட்சி 12

இடம் : கமலவேணி வீடு.

காலம் : மாலை.

(கமலவேணியும், இளங்கோவும் இருக்கின்றனர்)

கமல: நல்ல செய்தியோடு வருவாயென்று எதிர்பார்த்தேன் இளங்கோ.

இளங் : என் வாழ்வில் இப்படியொரு தோல்வியைச் சந்திப்பேனென்று நான் எதிர்பார்க்கவே இல்லையம்மா !

கமல: இதற்கெல்லாம் காரணம் செல்வரங்கமாகத்தானிருக்க வேண்டும் ! இருக்கட்டும் பிறர்க்கின்னா முற்பகல் செய்யின், தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்” என்ற குறளறம் என்றும் பொய்த்து விடாது !

(தாழம்பூ வருகிறாள்)

தாழம் : அம்மா !

கமல: தாழம்பூ !