பக்கம்:பதினாறும் பெறுக.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

33

33

முத்தன் : ஏது பெரிய வம்பாப் போச்சே !

இளங் : முத்தா யார் இந்தச் சிறுவன்?

முத்தன் . இவன் ஒரு அனாதைப் பயலுங்க. என் ஊட்லே வச்சு கஞ்சி ஊத்திகிட்டிருந்தேன். என்னைத் தேடிகிட்டு இங்கே வந்திட்டுது.

இளங்: என் தந்தையை அப்பா என்று அழைக்கிறூனே ? என்ன காரணம் ?

முத்தன்: என் ஊட்டுக்கு எசமான் வந்திருந்தபோது காசு கொடுத் தாரு. என் மகனாட்டமே இருக்கறேன்னு சொன்னாருங்க. அதை வச்சிகிட்டு அப்பா அப்பாங்கிறான். சின்னப்பயதானுங் களே ?

சுந்தர: முத்தா! அப்படின்ன இவரு என்னோட சொந்த அப்பா இல்லியா ?

முத்தன் : ஒனக்கு அப்பா ஏதடா அனாதைப்பயலே ?

சுந்தர : எங்கம்மா இவுருதான் எங்கப்பான்னு சொன்னாங்களே. நீயும் சொன்னியே ? இவுரு எங்கப்பாவேதான்-நீ என்னை ஏமாத்தப் பார்க்கறே ! அப்பா ! அப்பா !.... (பரமசிவத்திடம் தாவுகிறான் அவர் உதறுகிறார்)

பரம : அட சனியனே யாரு பெத்த பிள்ளையடா நீ? போடா !போடா!

சுந்தர: நான் மாலதி, பெத்த பிள்ளையப்பா! ஓங்களோட அன்பு மகனப்பா ! அம்மா காய்ச்சல் வந்து கண்ணை மூடிக் கெடக்கறாப்பா ! அப்பா என்னை ஏன் இப்படிப் பார்க்கறிக்க ? கண்ணே சுந்தரம்னு எவ்வளவு பிரியமாப் பேசுவீங்களே !

ஏம்ப்பா ! எம்மேலே இவ்வளவு வெறுப்பு? நான் ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சிடுங்க அப்பா ! அப்பா ! . . . அப்ாே . . .

(தந்தையின் காலில் விழுந்து பிடித்துக்கொள்கிருன் அடச்சி” என்று உதைத்துத் தள்ளுகிருர் பரமசிவம். அழுது குமைகிறன் சிறுவன்)

இளங் : அப்பா முத்தன் வீட்டிலே இந்தச் சிறுவனிடம் நீங்கள் அன்பு

காட்டியதும், காசு கொடுத்ததும் பொய்யல்லவே?

பரம : (தடுத்து) உம். . .வந்து நெசந்தாண்டா தம்பி !

இளங் : இந்தச் சிறுவனிடம் எனக்கென்னவோ. ஒரு பற்றும், பாசமும் ஏற்படுகிறதப்பா ! பாவம் அனதைப்பையன்: கொஞ்ச நாளைக்கு இவன் என்னேடு இருக்கட்டுமப்பா ! -

பரம : இவன் எதுக்கடா உன்னுேட?

இளங் : அைைதகளே ஆதரிப்பதில் தவறில்லையே! அது வசதிபடைத்தவர்

. களின் கடமையப்பா !

பரம : என்னமோ செய் ஆன என் வீட்லே இருக்கப்படாது இந்தச்

சனியன்! -.. . איי ..--יי