பக்கம்:பதினாறும் பெறுக.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39

39

முத்தன்: அது ரகசியமாகவே நடந்து போச்சுங்க.

செல்வ இதென்னடா அநியாயம்? நான் ரெண்டாந்தாரமும் கட்டிக்கலே, வைப்பாட்டியும் வச்சுக்கலே. பரிசுத்தமான தியாகின்னு பறையடிச்சானே பரமசிவம் இவ்வளவு தானா அவனோட சங்கதியும் ?

முத்தன்:எசமான் ! நான் ஒண்ணு சொல்றேன் கேக்கறீங்களா ?

செல்வ: சொல்லு முத்தா சொல்லுடா கேக்கறேன்.

முத்தன்: எங்க எசமான் மனைவி இருக்கறவரு; சின்ன எசமானோ விரும்பாதவரு. வயதிலும் எளையவரா, படிச்சவரா, அழகானவரா உங்க மகளை விரும்புரவரா ஒருத்தரு கெடைச்சா கல்யாணத்தை முடிச்சிடலாமுங்களா ?

செல் : எனக்குத் தெரிய அப்படி யாருமில்லியேடா முத்தா!

முத்தன்: இருக்கிறாருங்க எசமான் ! எனக்குத் தெரியும்.நான் சொல்லட்டுமா ?

செல்வ : சொல்லடா பார்ப்போம்.

முத்தன்: ஒங்க எதுத்தவூட்டு ஏகாம்பரம் மகன் குப்புசாமிக்கு என்னங்க கொரைச்சல்.

செல்வ: (சினந்து) ஆங்! அந்த கதி கெட்டவன் மகனுக்கா என்னோட மகளைக் கொடுக்கச் சொல்றே ? முத்தா! என்னோட அந்தஸ்து என்ன ? மலைக்கும் மடுவுக்குமா என வைக்கறே ? மனசாலே நெனைக்க லாமா இதை? நெனைக்கலாமா? வாயாலே சொல்லிட்டியேடா வக்கத்தவனே ? தூ! நாயே! கழுவுடா வாயை !

முத்தன் : ஆமாங்க எசமான் ! என் வாயை மட்டுமல்ல; கையையும் கழுவிக்கிறேன். தோ! இதை வையுங்க.

(நோட்டுக் கவரைக் கொடுத்துவிட்டு வேகமாகப் போகிறான்.)

செல்வ: என்ன திமிரு இவனுக்கு. கலப்பு மணமில்லே பண்ணச் சொல்றான். இவனுங்களைப் பார்க்கறேன் ஒரு கை.

(வேகமாகப் போகிறார்.)

காட்சி: 16

இடம் : பரமசிவம் வீடு.

காலம் : பிற்பகல்,

(பரமசிவமும், செல்வரங்கமும் இருக்கின்றனர்.)

பரம : ஐயா! கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிரு. ஆலோசனை பண்ணி,பொறுத்து செய்யறது தான் நல்லதுங்க.

செல்வ : பரமசிவம் ! என்னோட நெலைமையை நீ கவனிக்கணும். நாம் சம்பந்தம் கலக்கப்போறது. இந்த சேலத்துக்கு மட்டுமல்ல; சென்னைப் பட்டணம் வரைக்கும் எட்டிப் போச்சு. எல்லோரும் கல்யாணம் எப்போ எப்போன்னு கேக்கறாங்க. இனியும் காலதாமதம் ஆச்சுன் அது எனக்குப் பெரிய கேவலம். அதனாலே கல்யாணத்தை இந்த மாசத்திலேயே முடிச்சாகணும் சீதனப் பணம் ஒரு லட்சமும் தயார் பண்ணிட்டேன். கல்யாணச் செலவு என்னோட சேர்ந்தது. இன்னுமென்ன வேணும் ?