பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
119


1465-ல் ரெகியோ மோன்டனஸ் எனும் விஞ் ஞானி பார்த்த அதே வால்மீனை 1531-ல், 'பிராகேஸ்டிரோவும்', 'எபிலியனும் பார்த்தனர்; அதுவேதான் 1682-ல் தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவும் ஏற்பட்டது. ஹேலி ஆச்சர்யப்படும் வகையில், 1456-லிருந்து 1531 வரைக் கணக்கிட்டுப் பார்த்தால், 75 ஆண்டுகள் இடைவெளி இருக்கும்.

1531-முதல் 1607 வரை 76 ஆண்டுகள்—1607 முதல் 1682 வரை 75 ஆண்டுகள்!

எனவே, 1456, 1531, 1607, 1682 ஆண்டுகளில் தோன்றிய வின்மீன்கள்யாவும் ஒன்றே. இது நீள் லட்டம் பாதையில் செல்லுகின்றது. 75 அல்லது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் தெரியும் என ஹேலி அறிந்தார்.

இம்முடிவை உலகுக்கு அறிவிக்க அவருக்கு பல காலம் ஆயிற்று.

1705-ம் ஆண்டு அவர் அத்தனை கணக்கீடுகளையும் போட்டு, தமது முடிவு சரியே எனக் கண்டார்.

எனவே இவற்றினை வெளியிட்டு 1758-ம் ஆண்டு, மீண்டும் இந்த வால்மீன் உலகில் தென்படும் என அறிவித்தார்.