பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

99

என்று ஞான சம்பந்தர் பாடிய பாடலே நல்ல அகச்சான்று, இப்படி ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட தலமாகிய சீகாழிக்கே செல்கிறோம் நாம் இன்று.

சீகாழி தென்பிராந்திய ரயில் பாதையில் மாயூரத்துக்கும், சிதம்பரத்துக்கும் இடையிலுள்ள ஒரு சிறிய ஊர். ஊர் சிறியது என்றாலும் பேர் பெரியது. பிரமபுரம், வேணிபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம் என்றெல்லாம் பன்னிரண்டு திருப்பெயர் கொண்டது. இத்தனை பெயர்களும் காணாதென்று, பெருஞ்சாலை இலாக்காக்காரர்கள் மைல் கற்களில் எல்லாம் சீர்காழி என்று அழுத்தமாக எழுதியிருக்கிறார்கள். இவர்களுக்கு ரயில்வேக்காரர்கள் என்ன சளைத்தவர்களா? சிய்யாழி என்றே புதிய பெயர் ஒன்றைச் சூட்டி மகிழ்கிறார்கள்.

இந்தச் சீகாழி சென்றதும் நேரே கோயிலுக்குப் போகலாம். மதில்களும் கோபுரங்களும் கூடியதொரு பெரிய கோயில் அது. சட்டைநாதஸ்வாமி தேவஸ்தானம் என்ற பெயரோடு விளங்குகிறது. தருமபுர ஆதீனத்தார்